Saturday 7 August 2010

Vithura Neethi - 9 Aug 06,2010

Episode : Aug 06,2010


यस्य कृत्यं न विघ्नन्ति शीतमुष्नं भयं रतिः
समृद्धि: असमृद्धिर्वा स वै पण्डित उच्यते

yasya kṛtyaṃ na vighnanti śītam uṣṇaṃ bhayaṃ ratiḥ
samṛddhir asamṛddhir vā sa vai paṇḍita ucyate [33 :19]

He whose proposed actions are never obstructed by heat or cold, fear of attachment, prosperity or adversity, is considered wise.

स वै पण्डित उच्यते - இவன் பண்டிதன் என கொண்டாடப்படுகிறான்
யார் ஒருவனுடயோ செயலை இவை இவை எல்லாம் தடுப்பதில்லையோ, பாதிப்பதில்லையோ, அவன் பண்டிதன் என கொண்டாடப்படுகிறான்.
शीतम् - குளிர்ச்சி 
उष्नं - வெப்பம் 
வெப்பமோ குளிர்ச்சியோ யார் ஒருவனுடைய செயலை பாதிப்பதில்லையோ அவனே பண்டிதன்
भयं - பயமோ
रतिः -செய்யும் காரியத்தின் லட்சியம் சாமான்ய உலக இன்பத்துக்காக இல்லாமால்,ஆத்மா சாக்ஷாகாரத்திர்க்காகவும் ப்ருஹ்ம இன்பத்துக்காகவும் இருக்க வேண்டும். அதீதமான விருப்பம்/பற்றுதல் அந்த செயலை பாதிக்கக் கூடாது.

समृद्धि: असमृद्धि: - இந்த செயலாலே செல்வம் கிடைத்தாலும், செயல் கிட்டாமல் போனாலும், அந்த செயல் பாதிக்கப்படக் கூடாது 

வெப்பம்,குளிர்ச்சி என்னும் இரண்டோ
பயம்,விருப்பம் என்னும் இரண்டோ
செல்வம்,வறுமை என்னும் இரண்டோ
இந்த எதுவுமே எவன் ஒருவன் செய்யும் செயலை பாதிக்காதோ, அவனே பண்டிதன்.

ராமனுக்காக சீதையைக் கண்டு,ராமனைப் பற்றிய செய்தியைச் சொல்லி, சீதையின் இருப்பிடத்தை சீக்கிரம் திரும்பி வந்து ராமனிடம் தெரிவிக்க வேண்டும் என்னும் பெரிய லட்சியத்தோடு மகேந்திர பர்வதத்தின் உச்சியில் இருந்து ஆஞ்சநேயர் தாண்டினார். அப்போது நடுக்ககடலில் செல்லும் ஆஞ்சநேயருக்கு உதவி செய்ய மைனாகன் என்று ஒரு மலை நின்றது. ஆஞ்சநேயரின் தந்தையாகிய வாயு பகவானின் நண்பரான மைனாக மலையின் உதவியை நிராகரித்து விட்டு ஆஞ்சநேயர் இலக்கை நோக்கி பயணித்தார். "நான் அவசரமா ஒரு காரியத்துக்கு போயின்றுக்கேன் , வரச்சே உம்ம பாக்கறேன் என்று அவரையும் புண்படுத்தாமல் காரியத்தையும் நிறுத்தாமல் நேரே பறந்தார்"

அடுத்து, சுரதா என்னும் நாக கன்னிகை, ஆஞ்சநேயரை பரீக்ஷை பண்ணுவதற்காக, தன் பெரிய வாய்க்குள் புகுந்து தான் போக வேண்டும் என்று சொல்ல, சட்டென சிறிய உருவம் எடுக்க முடிவெடுத்து வாய் வழி புகுந்து காது வழி கடந்து சென்றார். 

GIST : வேண்டியவர்கள் குறுக்க வருவதும் கூடாது. வேண்டாதவர்கள் வருதலும் கூடாது. இப்படி, எடுத்த செயலில் மட்டும் இலக்குடையவனாய் , வெப்பமோ குளிர்ச்சியோ,லாபமோ அலாபமோ, விருப்பமோ பயமோ- இதனால் பாதிக்கப்படாமல் இருப்பவனே பண்டிதன் என சொல்லப் பெறுகிறார், என்று அடுத்த அடையாளம் சொல்கிறார்.

1 comment:

  1. Thank you so much for this.. but i would be truely greatful to you if you can traslate things in english..

    ReplyDelete