Wednesday 11 August 2010

Vithura Neethi-10 Aug 09 2010

Episode : Aug 09,2010


यस्य संसारिणी प्रज्ञा धर्मार्थाव अनुवर्तते
 कामाद अर्थं वृणीते यः स वै पण्डित उच्यते


yasya saṃsāriṇī prajñā dharmārthāv anuvartate
kāmād arthaṃ vṛṇīte yaḥ sa vai paṇḍita ucyate [33:20]




He whose judgment dissociated from desire, followeth both virtue and profit, and who disregarding pleasure chooseth such ends as are serviceable in both worlds, is considered wise.


स वै पण्डित उच्यते - sa vai pandita ucyate - அவரே பண்டிதர் என்று கொண்டாடப்படுகிறார்.

(எவர்)यस्य संसारिणी प्रज्ञा - yasya samsārinī prajñā - லௌகீக/ உலக அறிவு/புத்தி - உலக அறிவானது 

धर्मार्थाव अनुवर्तते - தர்மத்திலேயும், அர்த்ததிலேயும் நிலை நிற்கிறதோ 

உலகப்பொது அறிவானது யார் ஒருவனுக்கு தர்மத்திலேயும்,பொருளிலேயும் நிலை நிற்கிறதோ

कामाद अर्थं वृणीते यः - தத்வத்த ஒழுங்கா தெரிஞ்சிண்டு "தனக்கேற்ற" புருஷார்த்தத்தை யார் நிர்ணயித்துக் கொள்கிறானோ அவன் பண்டிதன் என்று சொல்லப்படுகிறான்.
पुरुषै: अर्थत इथि पुरुषार्थ: - ஒரு புருஷனாலே விரும்பப்படுவது எதுவோ அது புருஷார்த்தம். இங்கே புருஷன் என்ற சொல்லுக்கு ஆண்மகன் என்ற பொருள் கிடையாது. ஆத்மா என்று கொள்ள வேண்டும். ஒருத்தொருதரும் எதில் விருப்பபடுகிறானோ அது சரியான விருப்பமா, இது தான் தனக்கேற்ற விருப்பமா என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த புருஷார்த்தத்தை முதல்ல நிச்சயம் பண்ணிக்கணும். இலக்கை define பண்ணிக்கலைனா, வாழ்க்கை வாழ்வதே அர்த்தமற்றது.

The place of the goal post is pre-defined in the football game. Though the players play with the ball, their aim is to get the ball to their goal post. The goal post is "set" in their mind. Even when sometimes they kick the ball in opposite direction, their "புத்தி" is keen to take the ball to their respective goal post. கோல் போஸ்ட சட்டு சட்டுனு மாத்திண்டே இருந்தா, ஆட்டம் நடக்காது. மொத்த ஆட்டமும் வீண்.

வாழ்க்கை என்னும் பெரும் விளையாட்டு. இந்த ஆட்டத்தில் நம்முடைய கோல் போஸ்ட் எது ?! பால்-ஐ எங்க கொண்டு போய் எப்படி அடிக்கணும் இத நாம சரியாய் தெரிஞ்சுடனும். அதனால் தான் "புருஷார்த்தத்தை" முதல்ல நாம நிர்ணயம் பண்ணினுடனும். இது தான் நான் விரும்பத் தக்கது. இதை தான் நான் அடைய வேண்டும் என்று நிர்ணயம் பண்ணிவிட்டு அதுக்குத் தகுந்தாப்ல தான் நடக்கணும். நாம என்ன விருப்பபடுறோம், அந்த விருப்பம் நமக்கு ஏற்றது தான, இதை அடையறதுக்கு தான் நாம் செய்ற ஒவ்வொரு செயலும் பயன் படறதா ?! இதுக்கு குறுக்க நாம எதையும் வர விடறோமா ?!

துரோணர் அம்பை குறி வைக்கச் சொல்லும் போது, இலக்கை நோக்கிச் சரியாகக் குறி வைத்த அர்ஜுனனை மட்டுமே அம்பெய்யச் சொன்னார். அர்ஜுனனும் இலக்கை எட்டினான். அது போல், நமக்கும் ஒரு இலக்கு இருந்தால், புத்தி அதில் தான் இருக்க வேண்டும். அதைச் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். கண்ட கண்ட விஷயத்தில் முயற்சியை வீணடித்தால், நிறைய விஷயங்கள் மட்டுமே சேர்க்கலாம். We got to be focussed.

குறைச்சலான லட்சியம் வெச்சுண்டு, நிறைவா உழைக்கணும்.

விருப்பு வெறுப்புக்கள் ( புருஷார்த்தம்) ஒருவருக்கொருவர் வேறுபடும். 

1. இராமன் காட்டிற்குச் செல்வதற்கு முன்னால், சீதை "எது நரகம் ? எது சொர்க்கம்" என்று வினவ, இராமன் பிரசங்கித்தான். மாறாக சீதை, " உன்னோடு சேர்ந்திருந்தால் சொர்க்கம். உன்னை விட்டுப் பிரிந்தாலே நரகம்" என்றாள்.
2.நம்மாழ்வாரோ "நரகத்தை நகு நெஞ்சே"[10:06] என்று சம்சாரமே நரகம் என்கிறார்.
எனவே, நம்மை யார் என்று நினைத்துக் கொள்கிறோமோ,யார் என்று புரிந்து கொள்கிறோமோ அதற்கேற்றார்ப் போல் மாறுபடும்.

There are three types in this.
1.ऐश्वर्यार्थी
2a. कैवल्यार्थी
2b.भगवल्ला भार्थी


1.ऐश्वर्यार्थी -  உடலே ஆத்மா என்று சொன்னால் "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று settle ஆயிடுவோம். உலக இன்பமே புருஷார்த்தம் ஆயிடும். இது ऐश्वर्यार्थी.
உடல் வேறு ஆத்மா வேறு,உடலைக்காட்டிலும் உயர்ந்தவன் ஆத்மா என்று கொண்டால்,
இதற்கு மேல் இரண்டு வகைகள் உண்டு.

2a. कैवल्यार्थी -If we think we are svathanthrAtmA - independent aatmA, then பெருமாளை அனுபவிக்க ஆசை இல்லை. உடல் மேலும் ஆசை இல்லை. இதற்கு கைவல்யானுபவம் என்று பெயர். இதுவும் தாழ்ந்த வழி. ஆத்மா வை அனுபவித்தே காலத்தை கழித்து விடுவோம். 

2b.भगवल्ला भार्थी
இல்லை , நான் paramAthmA/sarvAthmA dependent ஜீவாத்மா. பரமாத்வாவிற்கு அடிமையான ஜீவாத்மா. நித்யம் ஆனந்த மயமான ஜீவாத்மா. ஆத்மா பரமாத்மாவை அடைந்து, வைகுந்தப் ப்ராப்தி ஏற்பட்டு அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் அங்கு தொண்டு புரிந்து கொண்டே வாழ்வது. இது மிக உயர்ந்தது.

இதை ஒரு மனிதன் நன்றாக புரிந்து கொள்வானே ஆனால், அவனைத் தான் பண்டிதன் என்று கொண்டாடுகிறோம்.

1 comment:

  1. Casino & Sports Betting - DrmCD
    Casino & 안동 출장안마 Sports 여수 출장샵 Betting: A Sportsbook/Casino · Horse Racing (TTM) · Greyhounds (TTM) · Horse 경기도 출장안마 Racing (TTM) · Horse 제주 출장마사지 Racing 하남 출장샵 (TTM) · Lotto

    ReplyDelete